18-02-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது..! இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா மேடையில் “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்” என்று அறிவித்தவுடன் பாரதிராஜாவே புருவத்தை உயர்த்தும்வகையில் கேலரியில் கை தட்டல் தூள் பறந்தது..!
இன்றைக்கு கமலா தியேட்டரில் எழுத்து-இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன் என்பதை டைட்டிலில் பார்த்தவுடனும் ரசிகர்களின் கை தட்டல் அசத்தல்..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது..! இயக்குநர்கள் சங்க ஆண்டு விழா மேடையில் “இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்” என்று அறிவித்தவுடன் பாரதிராஜாவே புருவத்தை உயர்த்தும்வகையில் கேலரியில் கை தட்டல் தூள் பறந்தது..!
இன்றைக்கு கமலா தியேட்டரில் எழுத்து-இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன் என்பதை டைட்டிலில் பார்த்தவுடனும் ரசிகர்களின் கை தட்டல் அசத்தல்..!
எல்லாம் கொஞ்ச நேரம்தான். படம் துவங்கி முதல் அரை மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் புஸ்ஸாகிப் போனார்கள். இடைவேளையிலேயே முணுமுணுத்தார்கள். “என்ன ஸார் இது? கெளதமா இப்படி எடுத்திருக்காரு?” என்று வாங்கிய பாப்கார்னை சாப்பிடக்கூட பிடிக்காமல் தயங்கி நின்றார்கள்.
மொத்தமாக படம் முடிந்தவுடன் தயக்கத்துடனேயே பெரும் வருத்தத்துடன் வெளியேறினார்கள்..! நம்பவே முடியவில்லை.. இப்படியொரு படத்தை இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார் என்று..!
சிறு வயதில் தந்தையின் காமக் களியாட்டங்களை ஒளிந்திருந்து பார்த்து, பின்பு தந்தையாலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கூட்டுக் கலவியில் தந்தையாலேயே வற்புறுத்தி இயக்கப்பட்ட ஒரு சிறுவன், பெரியவனான பின்பு அதன் காரணமாகவே மனச்சிதைவுக்குள்ளாகி பெண்களைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்வதுதான் இத்திரைப்படத்தின் கதை..!
படத்தின் முதல் அதிர்ச்சியே தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெண்ணையே கற்பழிக்கும் கொடூரம். இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.. இதன் பின்பு இந்தப் பெண்மணி இவனது சதியால் இறந்த பின்பு “மீனாட்சியம்மா” என்று அழைக்கும்போதெல்லாம் எட்டி செவுட்டில் நாலு அறை, அறையலாமா என்று தோன்றுகின்ற அளவுக்கு வெறியை ஏற்படுத்தியிருக்கிறார் கெளதம். ஒருவேளை இதைத்தான் அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ..? நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!
சிகப்பு ரோஜாக்கள், டியூஷன் டீச்சர், ரதி, ரதி நிர்வேதம், மழு என்று பல படங்களில் இருந்து நிறைய பாடம் படித்திருக்கிறார் கெளதம். ஆனால் இது நிச்சயம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. தாலி செண்டிமெண்ட்டில் உருகிக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்கூட அந்த விரகத்தை எல்லை மீறாமல் ஏன் கமலுக்கு இந்த நிலைமை என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எல்லை மீறாமல்..!
சம்பவம் நடக்கும் இடம் மும்பை என்று பெயர் மாற்றி.. அங்கே இதெல்லாம் ரொம்பவே சகஜம் என்பதைப் போல் சொல்லாமல் சொல்லி எடுத்திருக்கிறார்கள். 8 வயது, 9 வயது 13 வயது என்றெல்லாம் வயது வாரியாகப் பிரித்த நிலையிலும் அந்தப் பையன் செக்ஸூவல் அட்டாக்கை தனது தந்தையிடம் இருந்தே பெறுகிறான் என்பதை இவ்வளவு விரிவாகக் காட்டத் தேவையே இல்லை..! இதுதான் கதை என்றால் இது தியேட்டர்களில் வருவதற்குத் தேவையா..? போர்னோ டிவிடிக்களில்கூட இது தடை செய்யப்பட்ட ஒன்று..! பெரிய திரைகளில் சென்சார் போர்டுகாரர்களின் புண்ணியத்தால் நாம் பார்த்து மகிழ வேண்டிய கட்டாயம்..!
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் டிவியில் பாரதிராஜா அப்படி பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொடூரமானது இது..! என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..!
வீரா என்ற ஹீரோவின் செயல் முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..
ஏதோ செக்ஸூவல் அத்துமீறல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி சில போன் நம்பர்களை இறுதி டைட்டிலில் காட்டுகிறார்கள். முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!
முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு இரண்டு பிட்டு காட்சிகள், இறுதியில் ஒரு டாக்டர் வந்து இப்படி அடுத்த பொண்ணு மேல கண்ணு வைக்குறது தப்பு. எய்ட்ஸ் வரும் என்று சொல்லி முடித்து வைப்பாரே பிட்டு படங்களில்.. அது போலத்தான் இருக்கிறது கெளதமின் இறுதி டைட்டில் சொற்பொழிவு..!
நேற்று 'நந்தி' என்றொரு படத்தை பார்த்தேன். கெளதமின் இந்தப் படத்திற்கு அது எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது..!
அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை' படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்..!
மொத்தமாக படம் முடிந்தவுடன் தயக்கத்துடனேயே பெரும் வருத்தத்துடன் வெளியேறினார்கள்..! நம்பவே முடியவில்லை.. இப்படியொரு படத்தை இப்படியொரு இயக்குநர் எடுத்துக் கொடுப்பார் என்று..!
சிறு வயதில் தந்தையின் காமக் களியாட்டங்களை ஒளிந்திருந்து பார்த்து, பின்பு தந்தையாலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கூட்டுக் கலவியில் தந்தையாலேயே வற்புறுத்தி இயக்கப்பட்ட ஒரு சிறுவன், பெரியவனான பின்பு அதன் காரணமாகவே மனச்சிதைவுக்குள்ளாகி பெண்களைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்வதுதான் இத்திரைப்படத்தின் கதை..!
படத்தின் முதல் அதிர்ச்சியே தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு தனக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்த பெண்ணையே கற்பழிக்கும் கொடூரம். இதற்குக் காரணமாக அவன் நினைப்பது பாலியல் வேட்கையில் சிக்கிக் கொண்டானாம்.. இதன் பின்பு இந்தப் பெண்மணி இவனது சதியால் இறந்த பின்பு “மீனாட்சியம்மா” என்று அழைக்கும்போதெல்லாம் எட்டி செவுட்டில் நாலு அறை, அறையலாமா என்று தோன்றுகின்ற அளவுக்கு வெறியை ஏற்படுத்தியிருக்கிறார் கெளதம். ஒருவேளை இதைத்தான் அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ..? நான் கோபப்படுவது.. அவனது கற்பழிக்கும் செயலுக்காக அல்ல.. “மீனாட்சியம்மா..” என்று கூப்பிடுவதற்காக..!
சிகப்பு ரோஜாக்கள், டியூஷன் டீச்சர், ரதி, ரதி நிர்வேதம், மழு என்று பல படங்களில் இருந்து நிறைய பாடம் படித்திருக்கிறார் கெளதம். ஆனால் இது நிச்சயம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. தாலி செண்டிமெண்ட்டில் உருகிக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்கூட அந்த விரகத்தை எல்லை மீறாமல் ஏன் கமலுக்கு இந்த நிலைமை என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் எல்லை மீறாமல்..!
சம்பவம் நடக்கும் இடம் மும்பை என்று பெயர் மாற்றி.. அங்கே இதெல்லாம் ரொம்பவே சகஜம் என்பதைப் போல் சொல்லாமல் சொல்லி எடுத்திருக்கிறார்கள். 8 வயது, 9 வயது 13 வயது என்றெல்லாம் வயது வாரியாகப் பிரித்த நிலையிலும் அந்தப் பையன் செக்ஸூவல் அட்டாக்கை தனது தந்தையிடம் இருந்தே பெறுகிறான் என்பதை இவ்வளவு விரிவாகக் காட்டத் தேவையே இல்லை..! இதுதான் கதை என்றால் இது தியேட்டர்களில் வருவதற்குத் தேவையா..? போர்னோ டிவிடிக்களில்கூட இது தடை செய்யப்பட்ட ஒன்று..! பெரிய திரைகளில் சென்சார் போர்டுகாரர்களின் புண்ணியத்தால் நாம் பார்த்து மகிழ வேண்டிய கட்டாயம்..!
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் விஜய் டிவியில் பாரதிராஜா அப்படி பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொடூரமானது இது..! என்னதான் ஏ சர்டிபிகேட் கொடுத்திருந்தாலும் தனி நபராகக் கூட காணச் சகிக்கவில்லை..!
வீரா என்ற ஹீரோவின் செயல் முட்டாள்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும், அருவருப்பாகவும் உள்ளது. எந்தவிதத்திலும் இப்படம் சமூக நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை..! திகில் பட வரிசையில்கூட இதனைச் சேர்க்க முடியாது..
ஏதோ செக்ஸூவல் அத்துமீறல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி சில போன் நம்பர்களை இறுதி டைட்டிலில் காட்டுகிறார்கள். முதலில் இப்படம் ஓடும் தியேட்டர்களை குற்றம் சுமத்திதான் புகார் செய்ய வேண்டும்..!
முன்னொரு காலத்தில் இடைவேளைக்கு முன்பு ஒரு பிட்டு காட்சி, இடைவேளைக்கு பின்பு இரண்டு பிட்டு காட்சிகள், இறுதியில் ஒரு டாக்டர் வந்து இப்படி அடுத்த பொண்ணு மேல கண்ணு வைக்குறது தப்பு. எய்ட்ஸ் வரும் என்று சொல்லி முடித்து வைப்பாரே பிட்டு படங்களில்.. அது போலத்தான் இருக்கிறது கெளதமின் இறுதி டைட்டில் சொற்பொழிவு..!
நேற்று 'நந்தி' என்றொரு படத்தை பார்த்தேன். கெளதமின் இந்தப் படத்திற்கு அது எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது..!
அவசியம் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் 'சிறுத்தை' படத்தைக்கூட இரண்டாவது முறையாகப் போய்ப் பாருங்கள். புண்ணியமாகப் போகும்..
இது அவசியம் பார்க்கக் கூடாத, வேண்டாத திரைப்படம்..!
No comments:
Post a Comment